ஆசாரக்கோவை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


ஆசார வித்து[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோல்டு<br .

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
    நிலக்கிழமை மீக்கூற்றும் கல்விநோ யின்மை
    இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
    ஒழுக்கம் பிழையா தவர்.

தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்[தொகு]

(இன்னிசை சிந்தியல் வெண்பா)

  1. தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
    முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
    எப்பாலும் ஆகா கெடும்.

முந்தையோர் கண்ட நெறி[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
    நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
    தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
    முன்தையோர் கண்ட முறை.

எச்சிலுடன் தீண்டத் தகாதவை[தொகு]

(இன்னிசை சிந்தியல் வெண்பா)

  1. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
    உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
    திட்பத்தால் தீண்டாப் பொருள்.

எச்சிலுடன் காணக் கூடாதவை[தொகு]

(இன்னிசை சிந்தியல் வெண்பா)

  1. எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
    தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
    நன்கறிவார் நாளும் விரைந்து.

எச்சில்கள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
    இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
    விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

எச்சிலுடன் செய்யக் கூடாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
    ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
    மேதைகள் ஆகுறு வார்.

காலையில் கடவுளை வணங்குக[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
    தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
    நின்று தொழுதல் பழி.

நீராட வேண்டிய சமயங்கள்[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
    உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
    வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
    மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
    ஐயுறாது ஆடுக நீர்.

பழைமையோர் கண்ட முறைமை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
    உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
    ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
    முந்தையோர் கண்ட முறை.

செய்யாமல் தவிர்க்க வேண்டியவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
    பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
    குறையெனினும் கொள்ளார் இரந்து.

செய்யத் தகாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
    கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
    நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
    நீர்தொடார் நோக்கார் புலை.

நீராடும் முறை[தொகு]

( இன்னிசை வெண்பா)

  1. நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
    நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
    காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
    ஆய்ந்த அறிவி னவர்.

உடலைப்போல் போற்றத் தக்கவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
    தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
    ஐம்பூதம் அன்றே கெடும்.

யாவரும் கூறிய நெறி[தொகு]

(சவலை வெண்பா)

  1. அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
    நிகரில் குரவர் இவர்இவரைத்

தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.

நல்லறிவாளர் செயல்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
    குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
    மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
    நல்லறி வாளர் துணிவு.

உணவு உண்ணும் முறைமை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
    உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
    உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
    கொண்டார் அரக்கர் குறித்து.

கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
    ஈரம் புலராமை ஏறற்க என்பதே
    பேரறி வாளர் துணிவு.

உண்ணும் விதம்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
    தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
    பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
    உண்க உகாஅமை நன்கு.

ஒழுக்கம் பிழையாதவர் செய்வது[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
    இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
    ஒழுக்கம் பிழையா தவர்.

பிற திசையும் நல்ல[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
    முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
    முகட்டு வழிகட்டில் பாடு.

உண்ணக்கூடாத முறைகள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
    சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
    இறந்தொன்றும் தின்னற்க நின்று.

பெரியோருடன் இருந்து உண்ணும் முறை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
    என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
    பெரியார்தம் பாலிருந்தக் கால்.

கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
    மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
    துய்க்க முறைவகையால் ஊண்.

உண்ணும் கலங்களைக் கையாளும் முறை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
    உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
    அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
    பண்பினால் நீக்கல் கலம்.

உண்டபின் செய்ய வேண்டியவை[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
    அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
    முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
    ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
    மிக்கவர் கண்ட நெறி.

நீர் குடிக்கும் முறை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
    கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
    சொறியார் உடம்பு மடுத்து.

மாலையில் செய்யக் கூடியவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. அந்திப் பொழுது கிடவார் நடவாரே
    உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
    அல்குண்டு அடங்கல் வழி.

உறங்கும் முறை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
    வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
    உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

இடையில் செல்லாமை முதலியன[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
    மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
    உடன்செல்லல் உள்ளம் உவந்து.

மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
    தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
    ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
    சோரார் உணர்வுடை யார்.

மலம் சிறுநீர் கழிக்கும் முறை[தொகு]

(குறள் வெண்பா)

  1. பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
    பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

மலம், சிறுநீர் கழிக்கும் திசை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
    அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
    இந்திர தானம் பெறினும் இகழாரே
    தந்திரத்து வாழ்துமென் பார்.

வாய் அலம்பாத இடங்கள்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
    வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
    வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
    பெய்பூச்சுச் சீரா தெனின்.

ஒழுக்க மற்றவை[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
    இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
    படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
    பலரிடை ஆடை உதிராரே என்றும்
    கடனறி காட்சி யவர்.

நரகத்துக்குச் செலுத்துவன[தொகு]

(நேரிசை வெண்பா)

  1. பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
    அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
    எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
    செல்வழி உய்த்திடுத லால்.

எண்ணக்கூடாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
    ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
    ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
    தெய்வமும் செற்று விடும்.

தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
    அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
    ஊட்டினமை கண்டுண்க ஊண்.

சான்றோர் இயல்பு[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
    இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
    இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.

சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
    புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
    நுண்ணிய நூலறிவி னார்.

மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
    ஈராறு நாளும் இகவற்க என்பதே
    பேரறி வாளர் துணிவு.

உடன் உறைதலுக்கு ஆகாத காலம்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
    மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
    அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
    ஒட்டார் உடனுறைவின் கண்.

நாழி முதலியவற்றை வைக்கும் முறை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
    கோடி கடையுள் விரியார் கடைத்தலை
    ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
    தந்தலைக்கண் நில்லா விடல்.

பந்தலில் வைக்கத் தகாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
    கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
    பரப்பற்க பந்த ரகத்து.

வீட்டைப் பேணும் முறைமை[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. காட்டுக் களைந்து கலம்கழீ இல்லத்தை
    ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
    நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
    இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
    நல்லது உறல்வேண்டு வார்.

நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
    அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
    நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
    இலங்குநூல் ஓதாத நாள்.

அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
    ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
    பெய்க விருந்திற்கும் கூழ்.

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
    நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
    குடிமைக்கும் தக்க செயல்.

கேள்வியுடையவர் செயல்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பழியார் இழியார் பலருள் உறங்கார்
    இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
    இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
    தாங்கருங் கேள்வி யவர்.

தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
    நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
    முன்னொளியும் பின்னொளியும் அற்று.

தளராத உள்ளத்தவர் செயல்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
    வசையும் புறனும் உரையாரே என்றும்
    அசையாத உள்ளத் தவர்.

ஒழுக்கமுடையவர் செய்யாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. தெறியொடு கல்லேறு வீளை விளியே
    விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
    உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
    பயிற்றார் நெறிப்பட் டவர்.

விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
    கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
    ஊணொடு செய்யும் சிறப்பு.

அறிஞர் விரும்பாத இடங்கள்[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
    நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
    குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
    நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
    நீர்க்கரையும் நீடு நிலை.

தவிர்வன சில[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
    துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
    கானம் தமியர் இயங்கார் துளியஃகி
    நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
    தொல்வரவின் தீர்ந்த தொழில்.

நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
    ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
    தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
    நோயின்மை வேண்டு பவர்.

ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
    எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
    எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
    கொள்வர் குரவர் வலம்.

சில தீய ஒழுக்கங்கள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
    அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
    படக்காயார் தம்மேற் குறித்து.

சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
    ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடு அங்கு
    ஓராறு செல்லுமிடத்து.

நூல்முறை உணர்ந்தவர் துணிவு[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
    மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
    நூன்முறை யாளர் துணிவு.

சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
    ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
    சாரத்தால் சொல்லிய மூன்று.

கற்றவர் கண்ட நெறி[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
    மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
    திறங்கண்டார் கண்ட நெறி.

வாழக்கடவர் எனப்படுவர்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
    மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
    ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
    போற்றி யெனப்படு வார்.

தனித்திருக்கக் கூடாதவர்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
    சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
    தாங்கற்கு அரிதஆக லான்.

மன்னருடன் பழகும் முறை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
    கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
    இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
    கடைபோக வாழ்துமென் பார்.

குற்றம் ஆவன[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
    உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
    பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
    வடுக்குற்ற மாகி விடும்.

நல்ல நெறி[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
    சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
    பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
    அளவளா வில்லா இடத்து.

மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
    தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
    இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
    காக்கைவெள் என்னும் எனின்.

மன்னன் முன் செய்யத் தகாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
    வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
    புணரார் பெரியா ரகத்து.

மன்னன் முன் சொல்லக் கூடாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
    குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
    பாரித்துப் பல்காற் பயின்று.

வணங்கக்கூடாத இடங்கள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
    வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
    நேர்பெரியார் செல்லு மிடத்து.

மன்னர் முன் செய்யத் தகாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
    இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
    அசையாது நிற்கும் பழி.

ஆசிரியரிடம் நடக்கும் முறைமை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
    இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
    சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
    வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
    எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
    கொள்ளார் பெரியார் அகத்து.

சொல்லும் முறைமை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
    பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
    சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
    சொல்லுக செவ்வி அறிந்து.

நல்ல குலப்பெண்டிர் இயல்பு[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
    எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
    தம்மேனி அல்லால் பிற.

மன்னர் அவையில் செய்யக் கூடாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
    சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
    தேர்வார்போல் நிற்க திரிந்து.

பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்[தொகு]

(நேரிசை வெண்பா)

  1. துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
    இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
    செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
    திறப்பட்டார் கண்ணே உள.

சான்றோர் பெயர் முதலியவை கூறாமை[தொகு]

(நேரிசை வெண்பா)

  1. தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
    உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
    என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
    நன்கறிவார் கூறார் முறை.

ஆன்றோர் செய்யாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
    இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
    தொழிற்குரிவர் அல்லா தவர்.

மனைவியின் உள்ளம் மாறுபடுதல்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
    ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
    மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
    உவப்பன வேறாய் விடும்.

கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
    உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
    அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
    கடைபோக வாழ்துமென் பார்.

பழகியவை என இகழத் தகாதவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
    முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
    இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
    இகழின் இழுக்கந் தரும்.

செல்வம் கெடும் வழி[தொகு]

(நேரிசை வெண்பா)

  1. அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
    இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
    மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
    மன்னிய செல்வம் கெடும்.

பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
    கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
    உண்டது கேளார் விடல்.

கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
    மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
    நில்லார்தாம் கட்டின் மிசை.

பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
    அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
    திறத்துளி வாழ்தும்என் பார்.

கிடைக்காதவற்றை விரும்பாமை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
    கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
    மெய்யாய காட்சி யவர்.

தலையில் சூடிய மோத்தல்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
    பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
    புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.

பழியாவன[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
    காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
    மூத்த உளஆக லான்.

அந்தணரின் சொல்லைக் கேட்க[தொகு]

(நேரிசை வெண்பா)

  1. தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
    புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
    அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
    என்றும் பிழைப்ப தில்லை.

சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
    என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
    நின்று உழியும் செல்லார் விடல்.

ஐயம் இல்லாத அறிவினர் செய்கை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
    மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
    கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
    ஐயமில் காட்சி யவர்.

பொன்னைப் போல் காக்கத் தக்கவை[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
    உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
    பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
    மன்னிய ஏதம் தரும்.

எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்[தொகு]

(இன்னிசை வெண்பா)

  1. நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
    தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
    அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
    எப்பெற்றி யானும் படும்.

சான்றோர் முன் சொல்லும் முறை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
    பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
    கண்ணுள்ளே நோக்கி யுரை.

புகக் கூடாத இடங்கள்[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. சூதர் கழகம் அரவம் அறாக்களம்
    பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
    ஏதம் பலவும் தரும்.

அறிவினர் செய்யாதவை[தொகு]

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

  1. உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
    நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
    இல்லம் புகாஅர் விடல்.

ஒழுக்கத்தினின்று விலகியவர்[தொகு]

(பஃறொடை வெண்பா)

  1. அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
    இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
    அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
    ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
    ஆசாரம் வீடுபெற் றார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசாரக்கோவை&oldid=1396052" இலிருந்து மீள்விக்கப்பட்டது