கைந்நிலை

விக்கிமூலம் இலிருந்து


புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை


(இந்நூலின் சில பாடல்கள், எல்லாப் பழைய பதிப்புகளிலும் சிதைந்து காணப்படுகின்றன.)

குறிஞ்சி[தொகு]

1[தொகு]

நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்

நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்

கானக நாடன் கலந்தான் இவன் என்று

மேனி சிதையும் பசந்து.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)

2[தொகு]

வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்

சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்

வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்

நெஞ்சம் நடுங்கி வரும்.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்)

3[தொகு]

பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்

காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்

பாசம்பட் டோ டும் படுகல் மலைநாடற்கு

ஆசையின் தேம்பும் என் நெஞ்சு.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)


4[தொகு]

ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய

தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்

தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய்

தேங்கலந்த சொல்லின் தெளித்து.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)


5[தொகு]

இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்

பிரசை இரும்பிடி பேணி வரூஉம்

முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்

நிரையம்எனக் கிடந்த வாறு.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)


6[தொகு]

மரையா உகளும் மரம்பயில் சோலை

உரைசால் மடமந்தி ஓடி உகளும்

புரைதீர் மலைநாடன் பூண்ஏந்து அகலம்

உரையா வழங்குமென் நெஞ்சு.


7[தொகு]

கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை

எல்உறு போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டு

ஒல்என ஓடு மலைநாடன் தன்கேண்மை

சொல்லச் சொரியும் வளை.


8[தொகு]

கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்

கி...க்...கொண்...கரும்

பெருங்கல் மலைநாடன் பேணி வரினே

சுருங்கும் இவள்உற்ற நோய்.

(துறை :: தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.)


9[தொகு]

காந்தள ரும்புகை என்று கதவேழம்

ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்

பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்

காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு.

(துறை :: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)


10[தொகு]

பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்

மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள்

இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்து

என்னை இமைபொரு மாறு.

(துறை :: தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)


11[தொகு]

எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி

பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்

முறிகிளர் நன்மலை நாடன் வருமே

அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு.

(துறை :: தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)


12[தொகு]

நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்

கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம்

முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன்

வடிவேல்கை ஏந்தி வரும்.

(துறை :: தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)

பாலை[தொகு]

13[தொகு]

கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை

விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்

நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே

வடுவிடை மெல்கின கண்.

(துறை :: வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).

14[தொகு]

கதநாய் துரப்ப..................................

............................................ அவிழும்

புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா

முதன் ....................

(துறை :: வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).

15[தொகு]

...........................................

...........................................

கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்

கொடுங்கல் மலை.....

(துறை :: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

16[தொகு]

............. வுறையு மெல்லென் கடத்துக்

கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு

...........................................

........................................... நமர்.

17[தொகு]

கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்

மடமா இரும்பிடி வேழ மரு.............

....................ண்ட உண்கண் ணுள்நீர்

...........................................

18[தொகு]

ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை

ஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்

தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு

வாய்மாண்ட பல்லி படும்.

(துறை :: பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.)

19[தொகு]

அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்

செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்

பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர்

நுதற்கு இவர்ந் தேறும் ஒளி.

(துறை :: பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.)


20[தொகு]

..............................................................

........................................... வீழ்க்கும்

ஓவாத வெங்கானம் சென்றார்........

..............வார் வருவார் நமர்.


21[தொகு]

ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்

காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்

ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சு

நீந்து நெடுவிடைச் சென்று.

(துறை :: பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது).


22[தொகு]

கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்

உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய்

தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்தவர்

வல்லைநாம் காணும் வரவு.

(துறை :: பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.)


23[தொகு]

சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில்

கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும்

இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார்

தொலைவிலர்கொல் தோழி நமர்.

(துறை :: ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது).


24[தொகு]

வெஞ்சுரம் தேரோட வெஃகிநின்று அத்தமாச்

சிந்தையான் நீர்என்று செத்துத் தவாஓடும்

பண்பில் அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடி

நண்பிலார் சென்ற நெறி.

(துறை :: ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது).

முல்லை[தொகு]

25[தொகு]

கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லை

கூர்எயிறு ஈனக் குருத்தரும்ப - ஓரும்

வருவர்நம் காதலர் வாள்தடங் கண்ணாய்

பருவரல் பைதல்நோய் கொண்டு.

(துறை :: பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது).


26[தொகு]

குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன

........... சேவல் எனப்பிடவாம் ஏறி

பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்

அரிதவர் வாரா விடல்.

(துறை :: பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது).


27[தொகு]

.......................................................................

.............. ................ ஒல்கப் புகுதரு

கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி

ஊர்தரு மேனி பசப்பு.

28[தொகு]

......................................................................

................. பெய்த புறவில் கடுமான்தேர்

ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர்

சில்...........................................................


29[தொகு]

.............. .............. ............... குருந்தலரப்

பீடார் இரலை பிணைதழுவக் காடாரக்

கார்வானம் வந்து முழங்................

......... ............ .......................


30[தொகு]

.............. ............... ................ ................

.............. .................. ............. ...............

கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர்

மன்றம் புகுதரும் போழ்து.


31[தொகு]

.............. .............. .................. ..............

................ ............. ................. ..............

.............. .............. ................ வானம்

வந்து துளிவழங்கக் கண்டு.


32[தொகு]

காரெதிர் வானம் கதழ்எரி சி.........

............... ................. .............. ..............

.................. ...........லக மெழுநெஞ்சே சொல்லாயால்

கூர்எரி மாலைக் குறி.

33[தொகு]

தளையவிழ்தே .......... ............. ...............

............... .............. ................... ..............

உளையார் கலிநன் மாப்பூட்டி வருவார்

களையாரோ நீயுற்ற நோய்.

34[தொகு]

முல்லை எயிறுஈன ............ ............

............. ............. ...........ன மல்கிக்

கடல்முகந்து கார்பொழியக் காதலர் வந்தார்

உடனியைந்த கெ............. .........................

35[தொகு]

.............. ............... ................ ..............

............... .............. ரடைப் பால்வாய் இடையர்

தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுதால்

அரித ............ ............... 5

36[தொகு]

பிடவங் குருந்தொடு பிண்டி மலர

மடவமயில் கூவ மந்திமா கூரத்

தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர்

இடபமெனக் கொண்டு தாம்.

(துறை :: தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்).

மருதம்[தொகு]

37[தொகு]

கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித்

தழென மதஎருமை தண்கயம் பாயும்

பழன வயலூரன் பாணஎம் முன்னர்ப்

பொழெனப் பொய்கூறா தொழி.

(துறை :: பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது).


38[தொகு]

கயலினம் பாயும் கழனி நல்லூர

நயமிலேன் எம்மனை இன்றொடு வாரல்

துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்கின்

குயி...... .............. ........... கொண்டு.

(துறை :: பரத்தையர் சேரியில் பயின்று வந்த தலைவனைப் பிரிந்து தலைவி கூறியது).


39[தொகு]

முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து

தொட்ட வரிவரால் பாயும் புனல்ஊரன்

கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில்

சுட்டி அலைய வரும்.

(துறை :: தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது).


40[தொகு]

தாரா இரியும் தகைவயல் ஊரனை

வாரான் எனினும் வரும்என்று - சேரி

புலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்

கலப்படும் கூடுங்கொல் மற்று.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது.)


41[தொகு]

பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை?

அஃதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்தி

நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்

சிறுவன் எனக்குடைமை யால்.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


42[தொகு]

நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும்

யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?

கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல்

ஆட்டுவித்து உண்ணினும் உண்.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


43[தொகு]

போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்

தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர்

ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்

பேதமை தம்மேலே கொண்டு.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


44[தொகு]

தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்

வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து

கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்

சாலவும் தூற்றும் அலர்.

(துறை :: வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


45[தொகு]

மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்

கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்

பாத்தில் பயமொழி பண்பு பலகூறி

நீத்தல் அறிந்திலேம் இன்று.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


46[தொகு]

கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்

நயமே பலசொல்லி நாணினன் போன்றான்

பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாது

எழுநீபோ நீடாது மற்று.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


47[தொகு]

அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர்

ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்துஞ்

செருக்கார் வளவயல்ஊரன் பொய்ப் பாண

இருக்கஎம் இல்லுள் வாரல்.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)


48[தொகு]

கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம்

மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தா

தக்கயாழ்ப் பாணதளர் முலையாய் மூத்தமைந்தார்

உத்தரம் வேண்டா வரல்.

(துறை :: வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

பாலை[தொகு]

49[தொகு]

நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள்

ஓவா கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப்

பாவாரம் சேர்ப்பதற்கு உரையாய் பரியாது

நோயான் நுணுகிய வாறு. 9


50[தொகு]

நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன்

ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்

கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும்

தடந்தாள் மடநாராய் கேள்.


51[தொகு]

மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய்

அணிநல முண்டிறந்து ...ம்மருளோ விட்ட

துணிமுந் நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்த

பணிமொழிப் புள்ளே பற.


52[தொகு]

அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம்

புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னை

நினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்கு

உரையேனோ பட்ட பழி.


53[தொகு]

அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர்

நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார்

புலவுமீன் குப்பை கவரும் துறைவன்

கலவான்கொல் தோழி நமக்கு.

(துறை :: வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது).


54[தொகு]

என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து

புன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்

சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை

என்னைகொல் யாம்காணு மாறு.

(துறை :: வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது).


55[தொகு]

கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்

நக்காங்கு அசதி தனியாடித் - தக்க

பொருகயல் கண்ணினாய் புல்லான் விடினே

இருகையும் நில்லா வளை.

(துறை :: பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது).


56[தொகு]

நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த

கருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின்

புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்

நுகர்வனன் உண்டான் நலம்.

(துறை :: வரைபொருள் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது).

57[தொகு]

கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத்

தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்

நிலவுக் கொடுங்கழி நீந்திடும் முன்றில்

புலவுத் திரைபொருத போழ்து.

(துறை :: தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது).


58[தொகு]

சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்

இறாஎறி ஓதம் அலற இரைக்கும்

உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்

பொறாஅஎன் முன்கை வளை.

(துறை :: தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்).


59[தொகு]

தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை

மாழை மானோக்கின் மடமொழி - நூழை

நுழையும் மடமகன் யார்கொல் என்றுஅன்னை

புழையும் அடைத்தாள் கதவு.

(துறை :: இரவு குறிக்கண் சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப் படைத்து மொழிந்தது.)


60[தொகு]

பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி

தென்னவன் கொற்கைக் குருகுஇரிய - மன்னரை

ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ

கூடல் அணைய வரவு.

(துறை :: வினை முடித்து மீண்ட தலைமகன் வரவு கண்ட தோழி தலைவிக்குக் கூறியது).


கைந்நிலை முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=கைந்நிலை&oldid=5646" இலிருந்து மீள்விக்கப்பட்டது